செய்திகள்
மாயம்

நாங்குநேரி அருகே வங்கிக்கு சென்ற இளம்பெண் மாயம்

Published On 2019-11-05 13:10 GMT   |   Update On 2019-11-05 13:10 GMT
நாங்குநேரி அருகே வங்கிக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள ஸ்ரீரெங்கராஜபுரத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 75), விவசாயி. இவரது மகள் சுதாலெட்சுமி (19). இவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். 

இந்நிலையில் சுதாலெட்சுமி கடந்த 2-ந் தேதி காலையில் மூலைக்கரைப் பட்டியில் உள்ள வங்கிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரை நண்பர்கள், உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை. 

இது குறித்து அவரது தந்தை முத்துகிருஷ்ணன் நாங்குநேரி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சுதாலெட்சுமி எங்கு சென்றார்? என்ன ஆனார்? என அவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News