செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே டிரைவர் மர்ம மரணம்
ஆண்டிப்பட்டி அருகே மர்மமான முறையில் இறந்த டிரைவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே ஆசாரிபட்டி வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்(34). டிரைவர் வேலை பார்த்து வந்தார். கூலிவேலைக்கும் சென்றுவந்த சுரேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
சம்பவத்தன்று சுரேசின் மனைவி அன்னலட்சுமி வெளியூர் சென்றுவிட்டார்.
வீட்டில் குடிபோதையில் சுரேஷ் தூங்கினார். அன்னலட்சுமி திரும்பி வந்து பார்த்தபோது கட்டில் கால் உடைந்து கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் சுரேஷ் பிணமாக கிடந்தார். இதுகுறித்து ராஜதானி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சுரேஷ் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.