செய்திகள்
கொள்ளை

மதுரையில் 2 வீடுகளில் புகுந்து நகை-பணம் கொள்ளை

Published On 2019-11-01 09:31 GMT   |   Update On 2019-11-01 09:31 GMT
மதுரையில் 2 வீடுகளில் புகுந்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை புதூர் வி.எம்.ஜி. நகரைச் சேர்ந்தவர் ஆஷா (வயது45). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு சாவியை மறைவான இடத்தில் வைத்து வெளியே சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நைசாக சாவியை எடுத்து வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

வீடு திரும்பிய ஆஷா நகை, பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள வெங்கடாசலபுரம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி கவுனாமணி (34). சம்பவத்தன்று இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டனர்.

நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 2 செல்போன்கள், ரூ.3 ஆயிரம் ரொக்கம், பென் டிரைவ் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர். இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், ஜீவா நகர் வள்ளுவர் தெருவைச் சேர்ந்த கண்ணன் (18) என்பவர் திருடியது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News