செய்திகள்
வெம்பாக்கம் அருகே பைக் விபத்தில் பெண் பலி
வெம்பாக்கம் அருகே பைக் விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெம்பாக்கம்:
வெம்பாக்கம் அருகே உள்ள பில்லாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது70), இவருடைய மணைவி ராணி (வயது 60), இவர்களது மகன் பன்னீர்செல்வம்.
நேற்று காலை பைக்கில் பன்னீர்செல்வம் ராணியுடன் காஞ்சிபுரம்- வெம்பாக்கம் மெயின் ரோட்டில் சென்றார். பில்லாந்தாங்கல் கூட்ரோட்டில் சென்ற போது பைக் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர்.
தலையில் பலத்த காயமடைந்த ராணி காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.