செய்திகள்
விபத்து

வெம்பாக்கம் அருகே பைக் விபத்தில் பெண் பலி

Published On 2019-10-30 10:29 GMT   |   Update On 2019-10-30 10:29 GMT
வெம்பாக்கம் அருகே பைக் விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெம்பாக்கம்:

வெம்பாக்கம் அருகே உள்ள பில்லாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது70), இவருடைய மணைவி ராணி (வயது 60), இவர்களது மகன் பன்னீர்செல்வம்.

நேற்று காலை பைக்கில் பன்னீர்செல்வம் ராணியுடன் காஞ்சிபுரம்- வெம்பாக்கம் மெயின் ரோட்டில் சென்றார். பில்லாந்தாங்கல் கூட்ரோட்டில் சென்ற போது பைக் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர்.

தலையில் பலத்த காயமடைந்த ராணி காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News