செய்திகள்
ஊழியர் பலி

கும்பகோணம் அருகே மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலி

Published On 2019-10-29 09:10 GMT   |   Update On 2019-10-29 09:10 GMT
கும்பகோணம் அருகே மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலியான சம்பவம் குறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்பகோணம்:

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் காளிவட்ட தெருவை சேர்ந்தவர் குமரன் (வயது 48), இவர் மின்சார துறையில் திருப்பனந்தாள் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் குமரன் தனது வீட்டில் போர்வையை துவைத்தார். பின்னர் அதை காய வைப்பதற்காக அங்கிருந்த கம்பியில் போட்டார். அப்போது கம்பியில் பாய்ந்திருந்த மின்சாரம் திடீரென குமரன் மீது பாய்ந்தது. இதில் குமரன் காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமரன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News