செய்திகள்
கோவை அருகே பள்ளி மாணவர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை சின்னவேடம் பட்டியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகன் ஜோதிராஜ் (வயது 15). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். ஜோதி ராஜ் சரியாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்து பள்ளிக்கு செல்லு மாறு கூறினர். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரிடமும் சொல்லாமல் ஜோதிராஜ் வெளியே சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்க வில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த கல்யாணசுந்தரம் இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜோதிராஜை தேடி வருகின்றனர்.