செய்திகள்
மரணம்

மேட்டுப்பாளையம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

Published On 2019-10-24 10:07 GMT   |   Update On 2019-10-24 10:07 GMT
மேட்டுப்பாளையம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 40) மரம் ஏறும் தொழிலாளி.

சம்பவத்தன்று சந்திரன் வழக்கம்போல அந்த பகுதியில் உள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு பாக்கு மரத்தில் ஏறி பாக்கை பறித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சந்திரன் மரத்தில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை காரமடையை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (51) தொழிலாளி . சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் சிறுமுகை ரோட்டில் சென்றார் அப்போது அந்த வழியாக வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து கோவிந்தராஜ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார் இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News