செய்திகள்
பாளை வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரிசையில் காத்து நின்ற வாக்காளர்கள்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவு

Published On 2019-10-21 13:04 GMT   |   Update On 2019-10-21 13:04 GMT
தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரியின் காமராஜ்நகர் தொகுதியில் வாக்குபதிவு நேரம் நிறைவுபெற்றது.
சென்னை:

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. அதேபோல் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. 

நேற்று முன்தினம் மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில் பிரசாரத்திற்காக வந்திருந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பிரதான கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட வெளிநபர்கள் தொகுதிகளில் இருந்து வெளியேறினார்கள். 

வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற்றது. வாக்குப்பதிவு நேரம் முடிந்த போதிலும், 6 மணிக்கு முன்பாக வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்த இடங்களில் வாக்கு இயந்திரங்களில் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 24 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
Tags:    

Similar News