செய்திகள்
தற்கொலை

பொள்ளாச்சி அருகே குடிபோதையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2019-10-21 09:21 GMT   |   Update On 2019-10-21 09:21 GMT
பொள்ளாச்சி அருகே குடிபோதையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் ஜெயபிரகாஷ் (வயது 28). கூலித் தொழிலாளி. தினசரி இவர் மது குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்வது வழக்கம். சம்பவத்தன்று ஜெயபிரகாஷ் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.

இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். பின்னர் ஜெயபிரகாசின் பெற்றோர் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டு துக்க வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஜெயபிரகாஷ் குடிபோதையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட ஜெயபிரகாசின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காரமடை அருகே உள்ள குட்டையூரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 65). டெய்லர். சம்பவத்தன்று இவர் தனது கடையில் உள்ள மின்சார தையல் எந்திரத்தில் துணிகளை தைத்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பழனிசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News