செய்திகள்
கோப்புப்படம்

திருத்தணி அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

Published On 2019-10-18 08:44 GMT   |   Update On 2019-10-18 08:44 GMT
திருத்தணி அருகே உள்ள கூட்டுறவு வங்கியின் கதவை உடைத்த போது அலாரம் ஒலித்ததால் பல லட்சம் மதிப்பிலான நகைகள் தப்பின.
பள்ளிப்பட்டு:

திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை- பள்ளிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதூர் கிராமத்தில் கூட்டுறவு வங்கி உள்ளது. நேற்று இரவு கொள்ளையர்கள் வங்கியின் கதவை உடைத்துள்ளனர். அப்போது அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். இதனால் வங்கியில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகள் தப்பின.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News