செய்திகள்
கைது

வெளிநாட்டு மதுபானம் விற்ற 4 பெண்கள் உள்பட 11 பேர் கைது

Published On 2019-10-17 15:10 GMT   |   Update On 2019-10-17 15:10 GMT
தருமபுரி மாவட்டத்தில் அனுமதியின்றி வெளிநாட்டு மதுபானம் விற்ற 4 பெண்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 68 பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.
தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில் அனுமதியின்றி அயல்நாட்டு மதுபானங்களை வாங்கி சில்லரையாக விற்பனை செய்து வருவதாக மாவட்ட எஸ்.பி.க்கு புகார் வந்தது. 

இதையடுத்து அவரது,  உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் உள்ள போலீசார் ரோந்து பணியில் 
ஈடுபட்டனர்.

அப்போது 11 இடங்களில் அயல்நாட்டு மதுபானங்களை விற்றதாக 4 பெண்கள் உள்பட 11 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் இருந்து 68 பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News