செய்திகள்
மாயம்

ஆலப்பாக்கம் அருகே இளம்பெண் மகளுடன் மாயம் - கணவர் போலீசில் புகார்

Published On 2019-10-15 09:27 GMT   |   Update On 2019-10-15 09:27 GMT
ஆலப்பாக்கம் அருகே இளம்பெண் மகளுடன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ்காந்தி நகர் கே.கே. சாலையை சேர்ந்தவர் பயாஸ். சொந்தமாக மினி வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி சல்மா (26). இவர்களுக்கு அமிரா (4) என்ற மகள் உள்ளார். பயாஸ் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார்.

இரவு வீடு திரும்பிய போது மனைவி சல்மாவும், மகள் அமிராவம் வீட்டில் இல்லை. அவர்கள் மாயமாகி இருந்தனர். இதுகுறித்து பயாஸ் மதுரவாயல் போலீசில் புகார் செய்து உள்ளார்.

Tags:    

Similar News