செய்திகள்
தற்கொலை

நாமக்கல்லில் கல்லூரி மாணவி தற்கொலை - போலீசார் விசாரணை

Published On 2019-10-10 05:57 GMT   |   Update On 2019-10-10 05:57 GMT
நாமக்கல்லில் கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்:

நாமக்கல் என்.கொசவம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். பொன்னுசாமி. இவரது மகள் பிரியங்கா (வயது 19). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

இந்த நிலையில் இவர் மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த பிரியங்கா நேற்று இரவு அங்குள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரியங்கா பிணத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News