செய்திகள்
தற்கொலை

தேன்கனிக்கோட்டை அருகே பள்ளி மாணவி தற்கொலை

Published On 2019-09-30 18:17 GMT   |   Update On 2019-09-30 18:17 GMT
தேன்கனிக்கோட்டை அருகே பள்ளி மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகா கிரியானப்பள்ளியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மகள் விகிதா (வயது 12). இவள் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணம் அடையவில்லை. இதனால் விகிதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News