செய்திகள்
சி.பி.ராதாகிருஷ்ணன்

உயர்மட்ட குழு அறிவிக்கும் வரை தமிழக பாஜகவிற்கு கூட்டுத்தலைமை தான் - சி.பி.ராதாகிருஷ்ணன்

Published On 2019-09-29 14:55 GMT   |   Update On 2019-09-29 14:55 GMT
உயர்மட்ட குழு அறிவிக்கும் வரை தமிழக பாஜகவிற்கு கூட்டுத்தலைமை தான் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி அந்த மாநில பாஜக தலைமை முடிவு செய்யும். இடைத்தேர்தல் குறித்த முக்கிய முடிவு நாளை காலைக்குள் வெளியாகும். 

உயர்மட்ட குழு அறிவிக்கும் வரை தமிழக பாஜகவிற்கு கூட்டுத்தலைமை தான். இடைத்தேர்தல் குறித்த பாஜகவின் நிலைப்பாட்டை இன்று இரவு அல்லது நாளை காலை தெரிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News