மதுரையில் ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி வழிப்பறி - 2 பேர் கைது
மதுரை:
மதுரை ஆனையூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் பாண்டி (வயது40) ஆட்டோ டிரைவர். இவர் தத்தனேரி மெயின் ரோடு சுடுகாடு சந்திப்பு பகுதியில் ஆட்டோவில் சென்றார்.
அப்போது மீனாட்சிபுரம் விருமாண்டி அருள்தாஸ்புரம் ஜெயசூர்யா ஆகியோர் வழிமறித்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பாண்டியிடம் பணம் பறித்ததாக செல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விருமாண்டி, ஜெயசூர்யா ஆகியோரை கைது செய்தனர்.
கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த முத்துவேல் (20) பீபிகுளம் முல்லை நகரில் உள்ள தனியார் மதுபானக்கூடத்தில் கேசியராக உள்ளார்.
நேற்று இரவு இவர் பணியில் இருந்தபோது, மீனாட்சிபுரம் எல்.ஐ.சி. காலனி செல்லப்பாண்டி (30) வந்தார்.
அவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக செல்லூர் போலீசில் முத்துவேல் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி செல்லப் பாண்டியை கைது செய்தனர்.