செய்திகள்
மரணம்

சுவாமிமலை அருகே உழவு பணியில் ஈடுபட்ட விவசாயி மர்ம மரணம்

Published On 2019-09-23 09:31 GMT   |   Update On 2019-09-23 09:31 GMT
சுவாமிமலை அருகே உழவு பணியில் ஈடுபட்ட விவசாயி மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுவாமிமலை, செப்.23- தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே திருப்புறம்பயம் ராமர் தெருவில் வசிப்பவர் சீனிவாசன் மகன் கணேசன் (வயது 58) விவசாயகூலி.

இவர் நேற்று அதே திருப்புறம்பியம் கிராமத்தை சேர்ந்த சிவசாமி என்பவரது நிலத்தில் பவர்டில்லர் டிராக்டர் மூலம் உழவு பணி மேற்கொண்டு வந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டரின் ரோட் டேட்டரில் விவசாயக் கூலி கணேசன் சிக்கி படுகாயமடைந்தார். படுகாய மடைந்த கணே சனை உடனடியாக நிலத்தின் உரிமையாளர் சிவசாமி மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக கணேசன் இறந்தார்.

இதனை அறிந்த கணேசனின் உறவினர்கள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி நாகப்பன் தலை மையில் நேற்று மாலை அரசு மருத்துவமனையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுவாமிமலை போலீசார் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் சாலைமறியல் போராட்டம் வாபஸ் பெற்றது.

இதுகுறித்து கணேசனின் சகோதரி பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

Tags:    

Similar News