செய்திகள்
மிரட்டல்

குடவாசலில் விவசாயியை மிரட்டிய 3 பேர் கைது

Published On 2019-09-21 11:05 GMT   |   Update On 2019-09-21 11:05 GMT
குடவாசலில் விவசாயியை மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடவாசல்:

குடவாசலில் சின்ன ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 59) விவசாயி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் செல்வராஜ் மகன் குமார் (28). இவர் தனது வீட்டில் உள்ள தென்னை மரத்தில் இருந்து தேங்காய் விழுந்து பம்பு உடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த பம்பை சீர்செய்து தரும்படி குமார் கூறியுள்ளார். கண்ணன் சரிசெய்து தருவதாக கூறியதாக கூறப்படுகிறது.

இதற்கு இடையில் குமாரின் தம்பி விஜய் கண்ணனை திட்டியதாக தெரிகிறது. இதில் இரண்டு பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த குமார், விஜய், மணிகண்டன் ஆகிய 3 பேரும் கண்ணனை அடித்ததாகவும் அரிவாளை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் குடவாசல் சப்-இன்ஸ்பெக்டர் திருமாறன் வழக்கு பதிவு செய்து மிரட்டல் விடுத்த 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News