செய்திகள்
மரணம்

கோவையில் இன்று சாரத்தில் இருந்து தவறி விழுந்து கட்டிடத்தொழிலாளி பலி

Published On 2019-09-20 09:51 GMT   |   Update On 2019-09-20 09:51 GMT
கோவையில் இன்று சாரத்தில் இருந்து தவறி விழுந்து கட்டிடத்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடவள்ளி:

கோவை வேடபட்டி மாரியம்மன் கோவில் வீதி வன்னிம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 55). கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி பேபி (50). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இன்று காலை தன்ராஜ் அதே பகுதியில் உள்ள ஸ்ரீராம் கார்டன் டாக்டர் தோட்டம் என்ற இடத்தில் நடைபெறும் கட்டிட வேலைக்கு சென்றார். தன்ராஜ் அங்கு கட்டப்பட்டிருந்த சாரத்தில் ஏறி வேலை செய்தார். மற்றவர்கள் அவரவர் வேலையில் ஈடுபட்டனர்.

சாரத்தில் வேலை செய்தபோது தன்ராஜ் 7 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. தன்ராஜ் விழுந்ததை யாரும் பார்க்கவில்லை.

சிறிது நேரத்தக்கு பின்னர் ஒரு தொழிலாளி தன்ராஜ் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம்போட்டார். சத்தம்கேட்டு மற்ற ஊழியர்கள் அங்கு வந்தனர். உடனே தன்ராஜை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து வடவள்ளி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தன்ராஜின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News