செய்திகள்
தற்கொலை

ஹேர்டை குடித்து இளம்பெண் தற்கொலை - போலீசார் விசாரணை

Published On 2019-09-19 07:57 GMT   |   Update On 2019-09-19 07:57 GMT
சங்கரன்கோவில் அருகே ஹேர்டை குடித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் விஜி ( வயது 35). தொழிலாளி. இவரது மனைவி தர்ஷினி (28). இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியது. இந்நிலையில் உடல் எடையை குறைப்பதற்காக தர்‌ஷனி மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். இதனை விஜி கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த தர்‌ஷனி வீட்டில் இருந்த ஹேர்டையை எடுத்து குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News