செய்திகள்
தற்கொலை

மதுகுடிப்பதை மனைவி கண்டித்ததால் லாரி டிரைவர் தற்கொலை

Published On 2019-09-18 09:40 GMT   |   Update On 2019-09-18 09:40 GMT
அரியாங்குப்பத்தில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் லாரி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

அரியாங்குப்பம் காந்தி நகர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (வயது38). லாரி டிரைவர். இவருக்கு அருணா என்ற மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.

இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதேபோல் நேற்று முன்தினம் ஜெயப்பிரகாஷ் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அருணா கண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அருணா கூலிவேலைக்கு சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த ஜெயப்பிரகாஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.

அக்கம் பக்கத்தினர் ஜெயப்பிரகாசை மீட்டு புதுவை கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே ஜெயப்பிரகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News