செய்திகள்
தற்கொலை

வலங்கைமான் அருகே எலி மருந்து தின்று பெண் தற்கொலை

Published On 2019-09-17 16:42 GMT   |   Update On 2019-09-17 16:42 GMT
வலங்கைமான் அருகே கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில், எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சிமிலி மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மனைவி சித்ரா(வயது 35). சம்பவத்தன்று சித்ரா வீட்டில் இருந்த எலி மருந்தை(விஷம்) தின்று விட்டார். இதனால் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பல்வேறு மகளிர் சுயஉதவி குழுக்களிடம் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாத விரக்தியில் சித்ரா, எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News