search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rat drug"

    • எலி மருந்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • குழந்தைகள் பல் துலக்கும் பேஸ்ட் என கருதி பயன்படுத்தும் அபாயம் ஏற்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

    உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் மற்றும் தற்கொலை முயற்சிக்கு தூண்டுகோலாக அமையும் என்ற வணிக பெயரில் விற்பனை செய்யப்படும் மஞ்சள் பாஸ்பரஸ் எலி மருந்தினை வேளாண்மை மற்றும் இதர உப யோகங்களுக்கு பயன்படுத்த ஒன்றிய அரசு முற்றிலும் தடைவிதித்துள்ளது.

    பொதுவாக மஞ்சள் பாஸ்பரஸ் எலி மருந்தானது வீட்டு உபயோகங்களுக்கு எலிகளை கட்டுப்படுத்து வதற்கு பயன்படுத்தப்படு கிறது. மேலும் இதனை குழந்தைகள் பல் துலக்கும் பேஸ்ட் என கருதி பயன்படுத்தும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் இதற்கு எதிர்வினை மருந்து இல்லாத காரணத்தினால் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இதனை தயா ரிப்பது மற்றும் பயன்படுத்து வதை முழுவதுமாக தடை செய்துள்ளது.

    எனவே பொதுமக்கள் யாரும் மஞ்சள் பாஸ்பரஸ் எலி மருந்தினை விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்தில் பயன்படுத்த வேண்டாம் எனவும், பூச்சி மருந்து விற்பனை நிலையங்கள் மற்றும் இதர கடைகளில் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனே மாவட்ட நிர்வாகம் அல்லது அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது காவல் நிலையத் திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    மேலும் பூச்சி மருந்து விற்பனையாளர்கள் மற்றும் இதர கடை விற்பனை யாளர்கள் மஞ்சள் பாஸ்ப ரஸ் எலி மருந்தை விற்பனை செய்வது தெரிய வந்தால் பூச்சி மருந்து தடைச்சட்டம் 1968-ன் கீழ், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ×