செய்திகள்
தஞ்சை அருகே பேனர் வைத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
தஞ்சை அருகே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பேனர் வைத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
வல்லம்:
தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் காவல் சரக பகுதியில் அனுமதியின்றி பல இடங்களில் பேனர் வைக்கப்பட்டு அகற்றபடாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று கள்ளப்பெரம்பூர் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
அப்போது தஞ்சை அருகே உள்ள மேலவெளி கிராமத்தில் அரசுக்கு நன்றி தெரிவித்து அ.தி.மு.க. ஊராட்சி முன்னாள் செயலாளர் சக்திவேல் என்பவர் வைத்திருந்த பேனரையும், ரெட்டிப்பாளையத்தில் காங்கிரஸ் பிரமுகரான முருக ரத்தினவேல் என்பவர் வைத்திருந்த பேனரையும், பிருந்தாவனம் பகுதியில் அப்பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் வைத்திருந்த பேனரையும் கள்ளப்பெரம்பூர் போலீசார் அகற்றினர்.
இது குறித்து 3 பேர் மீதும் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.