செய்திகள்
மரணம்

மதுரை அருகே வைகை ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

Published On 2019-09-17 09:46 GMT   |   Update On 2019-09-17 09:46 GMT
மதுரை அருகே திதி கொடுக்க வைகை ஆற்றில் இறங்கிய கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.

மதுரை:

மதுரை செக்கானூரணி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மகன் தினேஷ் (வயது19). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவ துணைப்படிப்பு (டி.பார்ம்) படித்து வந்தார்.

இன்று அவரது தாய்மாமாவுக்கு சோழவந்தான் அருகே உள்ள காடுப்பட்டி வைகை ஆற்று தடுப்பணை பகுதியில் திதி கொடுக்கப்பட்டது. இதில் தினேஷ் கலந்து கொண்டார்.

சடங்குகள் முடிந்த பின் தினேஷ் தனது உறவினர்களுடன் தடுப்பணை பகுதியில் தேங்கி இருந்த நீரில் பிண்டத்தை கரைக்க சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக தினேஷ் தண்ணீரில் மூழ்கி மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.

இதையடுத்து காடுப்பட்டி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் தினேசை தேடும் பணியில் ஈடுபட்டனர். பிற்பகல் வரை அவரது உடல் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது. அவர் நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Tags:    

Similar News