செய்திகள்
பால் கொள்முதல்

சென்னையில் தனியார் பால் விலை 4 ரூபாய் உயர்ந்தது

Published On 2019-09-15 07:16 GMT   |   Update On 2019-09-15 07:23 GMT
சென்னையில் தனியார் பால் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்ந்து 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சென்னை:

தமிழ்நாட்டில் ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டு 1 லிட்டர் பால் ரூ.56-க்கு விற்பனையாகி வருகிறது. ஆவின் பால் உயர்வை தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களும் 56 ரூபாய்க்கு பால் விலையை உயர்த்தி கொண்டனர்.

ஆரோக்கியா பால் பாக்கெட் 1 லிட்டர் ஏற்கனவே ரூ.56-க்கு விற்கப்பட்டு வந்ததால் இவர்கள் மட்டும் பால் விலையை உயர்த்தாமல் இருந்தனர்.

இப்போது ஆரோக்கியா பால் நிறுவனம் பால் விலையை இன்று முதல் மேலும் 4 ரூபாய் உயர்த்தி உள்ளது. 1 லிட்டர் பால் விலையை ரூ.56-ல் இருந்து ரூ.60 ஆக உயர்த்திவிட்டது. இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-

ஆவின் உள்பட அனைத்து பால்பாக்கெட் விலையும் ரூ.56-க்கு விற்கும் நிலையில் ஆரோக்கியா பால்பாக்கெட் 60 ரூபாய்க்கு விலையை ஏற்றிவிட்டனர்.

ஆந்திராவை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் கடந்த மாதம் தான் பால் விலையை உயர்த்தினார்கள். இப்போது மீண்டும் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்த உள்ளனர். ஒரே ஆண்டில் 4-வது முறையாக பால் விலையை உயர்த்துகிறார்கள். இதனால் பால் விற்பனை கடுமையாக வீழ்ச்சி அடையும்.

கடந்த மாதம் தமிழக அரசு ஆவின் பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தியதால் சென்னையில் மட்டும் தினமும் 90 ஆயிரம் லிட்டர் வரை பால் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது.

எனவே தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் தனியார் பால் விலையை உடனே வரன்முறை படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News