செய்திகள்
மீஞ்சூரில் தாய்-மகன் மாயம்: போலீசார் விசாரணை
மீஞ்சூர் அருகே தாய் மற்றும் மகன் மாயமானது குறித்து போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சுவாதி. மகன் லித்திஷ் (5). கடந்த 8-ந்தேதி சுவாதி மகன் லித்தீசுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுவருவதாக கூறி சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள்- நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
மீஞ்சூர் அடுத்த மேலூர் திருவுடையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனவந்தி (23). அதே ஊரில் திருவுடையம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனவந்தியை தேடி வருகின்றனர்.
மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சுவாதி. மகன் லித்திஷ் (5). கடந்த 8-ந்தேதி சுவாதி மகன் லித்தீசுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுவருவதாக கூறி சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள்- நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
மீஞ்சூர் அடுத்த மேலூர் திருவுடையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனவந்தி (23). அதே ஊரில் திருவுடையம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனவந்தியை தேடி வருகின்றனர்.