செய்திகள்
கைது

திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் துணி திருடிய ஊழியர் கைது

Published On 2019-09-09 11:54 GMT   |   Update On 2019-09-09 11:54 GMT
திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் துணி திருடிய ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் முதலி பாளையம் சிட்கோ தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்கு மேலாளராக இருப்பவர் வர்கீஸ். இவர் நிறுவனத்தில் உள்ள கணக்குகளை சரிபார்த்தார். அப்போது ரூ 80 ஆயிரம் மதிப்பிலான பின்னல் ஆடை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் துணிகள் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மேலாளர் இது தொடர்பாக ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார். அதில் எந்த தகவலும் கிடைக்கவில்லை

இதனையடுத்து ஊத்துகுளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.அப்போது அதே நிறுவனத்தின் பேக்கிங் பிரிவில் வேலை பார்த்த அப்பாஸ் (30) என்பவர் துணிகளை திருடி விற்பனை செய்திருப்பது தெரியவந்தது இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News