செய்திகள்
கடத்தல்

சோழவந்தானில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் கடத்தல்

Published On 2019-09-09 11:50 GMT   |   Update On 2019-09-09 11:50 GMT
2 குழந்தைகளுடன் இளம்பெண்ணை கடத்திச் சென்ற கொடைக்கானல் நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை:

மதுரை மாவட்டம், சோழவந்தான் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் கனவாய்பீர். இவரது மனைவி ரிஷ்வானா (வயது 32). இவர்களுக்கு ஷெரின் பாத்திமா (11), அரிஷ்கலாம் (14) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்த ரிஷ்வானா மற்றும் 2 குழந்தைகளையும் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த ரபீக் முகம்மது என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து சோழவந்தான் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை, குழந்தைகளுடன் கடத்திச் சென்ற நபரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News