செய்திகள்
தீக்குளித்து தற்கொலை

காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு- வாலிபர் தீக்குளித்து தற்கொலை

Published On 2019-09-07 09:18 GMT   |   Update On 2019-09-07 09:18 GMT
எர்ணாவூரில் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவொற்றியூர்:

வடபழனியை சேர்ந்தவர் மொய்தீன். நந்தனத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் அந்நிறுவனத்தில் பணிபுரியும் எர்ணாவூர் கண்ணினால் லேஅவுட்டை சேர்ந்த ராணியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்து வந்தார்.

இதுபற்றி ராணி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் ராணியை வேலைக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டனர். ஆனாலும் மொய்தீன் தொடர்ந்து ராணியை செல்போனில் தொடர்பு கொண்டு காதலை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை மொய்தீன் எர்ணாவூரில் உள்ள ராணியின் வீட்டிற்கு சென்று வாசலில் நின்றுகொண்டு தன்னை காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். அப்போது ராணியின் பெற்றோர் அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த மொய்தீன் தான் கொண்டு வந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடலில் தீப்பற்றிய நிலையில் அலறி துடித்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் மொய்தீனை மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். ராணிக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

மொய்தீன் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News