செய்திகள்
கைது

9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- கூலி தொழிலாளி கைது

Published On 2019-09-05 12:02 GMT   |   Update On 2019-09-05 12:02 GMT
தர்மபுரி அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி:

தர்மபுரியை அடுத்த கே.நடுஅள்ளி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

தோட்டத்து வீட்டில் குடியிருக்கும் மாணவி நேற்று அதிகாலை 4 மணிக்கு கழிவறைக்கு நடந்து சென்றார். அப்போது அவரது வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் கூலி தொழிலாளி குப்பன் (55) என்பவர் மாணவியின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்தார். அவரது சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்தனர். பின்னர் குப்பன் அங்கிருந்து சென்று விட்டார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை தர்மபுரி டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வழக்குபதிவு செய்து போக்சோ சட்டத்தின்கீழ் குப்பனை கைது செய்தார்.

Tags:    

Similar News