செய்திகள்
விருதுநகரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், எட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 23). இவர் சூலக்கரையில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றினார்.
அந்த நிறுவனத்தில் பெண்களும் பணி புரிகின்றனர். அவர்களில் 17 வயது பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி, பாலசுப்பிரமணியன் நெருங்கி பழகியுள்ளார்.
இந்த நிலையில் அவர், பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் 17 வயது பெண் புகார் கொடுத்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தில் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.