செய்திகள்
கைது

மதுரையில் ஓட்டல் ஊழியரிடம் ஜேப்படி- 2 பேர் கைது

Published On 2019-08-31 09:06 GMT   |   Update On 2019-08-31 09:06 GMT
மதுரையில் ஓட்டல் ஊழியரிடம் ஜேப்படி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

மதுரை நரிமேடு தாழை முதலியார் தெருவைச் சேர்ந்தவர் அபுபக்கர் (வயது 35). இவர் பி.பீ.குளம் சந்திப்பில் உள்ள மாலை நேர ஓட்டலில் சப்ளையராக வேலை செய்து வருகிறார்.

நேற்று மாலை அங்குள்ள மெயின் ரோடு பகுதியில் அபுபக்கர் நின்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர் அங்கு வந்து அவரது பையில் இருந்த பணத்தை ஜேப்படி செய்துவிட்டு தப்பி ஓடினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அபுபக்கர் திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். உடனடியாக அக்கம், பக்கத்தினர் திரண்டு பணம் ஜேப்படி செய்து விட்டு தப்பி ஓடிய 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் தல்லாகுளம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் ஸ்நேக் நாகராஜ் (24), முத்து (24) என தெரியவந்தது.

Tags:    

Similar News