செய்திகள்
கைது

கோவையில் பள்ளிக்கூட பகுதியில் கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

Published On 2019-08-29 16:39 GMT   |   Update On 2019-08-29 16:39 GMT
கோவையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிக்கூட பகுதியில் கஞ்சா விற்ற 4 வாலிபர்களை கைது செய்தனர்.
கோவை:

கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்பதாக சரவணம் பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.சப்-இன்ஸ்பெக்டர் பாரதி ராஜா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த ஈரோடு சூளை பகுதியை சேர்ந்த சித்தார்த்தன் (28), கேரள மாநிலம் திருச்சூர் ஸ்ரீஜித் (23), தர்மபுரி அசாருதீன் (27), கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் சதிஷ் குமார் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ஒன்றே கால் கிலோ கஞ்சா, ரூ. 2,200 ரொக்கப்பணம், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை பேரூர் போலீசார் சிறுவாணி மெயின் ரோட்டில்  காளம் பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.  அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். 

கஞ்சா கடத்தி வந்தவர் காளம் பாளையம் விவேகானந்தர் வீதியை சேர்ந்த சரவணராஜ் (23) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
Tags:    

Similar News