செய்திகள்
மரணம்

ராஜாக்கமங்கலம் அருகே வங்கி ஊழியர் மர்ம மரணம்

Published On 2019-08-29 11:30 GMT   |   Update On 2019-08-29 11:30 GMT
ராஜாக்கமங்கலம் அருகே வீட்டில் வங்கி ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜாக்கமங்கலம்

ராஜாக்கமங்கலத்தை அடுத்த வடக்கு கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 47). தங்கதுரை நாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவர்களின் படிப்புக்காக தங்கதுரை நாகர்கோவில் ராமன்புதூர் மீன் கடை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.

அவ்வப்போது அவர் வடக்கு கன்னங்குறிச்சியில் உள்ள சொந்த வீட்டுக்கும் சென்று வருவது வழக்கம்.

இதுபோல நேற்று மாலை தங்கதுரை, ராமன்புதூரில் இருந்து வடக்கு கன்னங்குறிச்சியில் உள்ள சொந்த வீட்டுக்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். நேற்றிரவு நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.

இதனால் மனைவி அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோதும் அவர் போனை எடுக்க வில்லை. இன்று காலை தங்கதுரையின் மகன் வடக்கு கன்னங்குறிச்சியில் உள்ள வீட்டுக்கு சென்றார். அங்கு தங்கதுரை இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

தந்தை இறந்து கிடப்பதை கண்டு மகன் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுபற்றி ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் தங்கநாடார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் தங்கதுரை எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News