செய்திகள்
விபத்து

தருமபுரியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

Published On 2019-08-28 11:39 GMT   |   Update On 2019-08-28 11:39 GMT
தருமபுரியில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்துள்ள ரெங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது52). கோவில்களுக்கு சிலைகளை செதுக்கும் சிற்பியாக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் முனிராஜ் தனது உறவினர் வீடான தருமபுரி பிடமனேரிக்கு நேற்று மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் ரெங்காரபுரத்திற்கு செல்வதற்காக சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பிடமனேரி பிரிவு சாலை ஓரமான மோட்டார் சைக்கிளை நிறுத்தி முனிராஜ் செல்போனில் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக  மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் மோதிய வேகத்தில் அந்த வாகனம் அங்கு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த முனிராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி இன்றுஅதிகாலை முனிராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தருமபுரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை வழக்குபதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News