செய்திகள்
மரணம்

ஆண்டிப்பட்டி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து மாணவன் பலி

Published On 2019-08-28 08:46 GMT   |   Update On 2019-08-28 08:46 GMT
ஆண்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அணைப்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் மகன் வினித் குமார் (வயது 15). இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்த மாணவன் சம்பவத்தன்று குமணன் தொழு பகுதியில் உள்ள தனது பெரியப்பா வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். வெள்ளிமலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்த போது பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

இது குறித்து அவரது அக்கா வினிதா கொடுத்த புகாரின் பேரில் மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News