செய்திகள்
திருவண்ணாமலை அருகே லாரி- சுற்றுலா பஸ் மோதல்: 15 பேர் படுகாயம்
திருவண்ணாமலை அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர்.
திருவண்ணாமலை:
வேலூர் விருதம்பட்டை சேர்ந்தவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வேளாங்கண்ணி கோவிலுக்கு சுற்றுலா சென்று விட்டு இன்று காலை சொகுசு பஸ்சில் வீடு திரும்பினர்.
திருவண்ணாமலை அருகே மல்லவாடி என்ற இடத்தில் பஸ் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பிரசாத் (வயது 24). சாமுண்டிஸ்வரி, ஜெயபிரகாஷ் (65). கோவிந்தம்மாள் (60). உள்பட 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு திருவண்ணாமலை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.