செய்திகள்
மரணம்

பெரியூரில் தோட்ட காவலுக்கு சென்றவர் தீ விபத்தில் பலி

Published On 2019-08-26 08:30 GMT   |   Update On 2019-08-26 08:30 GMT
பெரியூரில் தோட்ட காவலுக்கு சென்றவர் தீ விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள பெரியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 50) அவருக்கு சொந்தமான காபி தோட்டம் உள்ளது. அங்கு காபி, பீன்ஸ், அவரை, சவ்சவ் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். அவர் தோட்டத்தில் இரவு நேரத்தில் காவலுக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று முருகானந்தம் இரவு தோட்டத்திற்கு காவலுக்கு சென்றார்.

பின்னர் தோட்டத்தை சுற்றி பார்த்து விட்டு தூங்கினார். அப்போது எதிர்பாராதமாக மண்எண்ணை விளக்கு கீழே விழுந்து அவர் மீது தீப்பற்றி எரிந்தது. அவர் அலறும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News