செய்திகள்
தற்கொலை

கருமத்தம்பட்டியில் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2019-08-25 14:54 GMT   |   Update On 2019-08-25 14:54 GMT
கருமத்தம்பட்டியில் கையில் ஏற்பட்ட கட்டியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

கோவை கருமத்தம் பட்டியை சேர்ந்தவர் கணேசன். கூலித்தொழிலாளி. இவரது மகள் துர்கா (வயது 19). கல்லூரிக்கு சென்ற இவர் போதிய வசதி இல்லாததால் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். இந்தநிலையில் துர்காவுக்கு கையில் கட்டி ஏற்பட்டது. வலியால் துர்கா அவதிப்பட்டு வந்தார். தன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லுமாறு பெற்றோரிடம் கூறினார். ஆனால் பெற்றோர் வேறு வேலையில் இருந்ததால் துர்காவை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்வதில் தாமதமானது.

இதனால் விரக்தியடைந்த துர்கா சம்பவத்தன்று வி‌ஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை பெற்றோர் மீட்டு சோமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துர்கா பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News