செய்திகள்
விபத்து

தூசி அருகே ஆட்டோ கவிழ்ந்து 13 பெண் தொழிலாளர்கள் படுகாயம்

Published On 2019-08-23 12:22 GMT   |   Update On 2019-08-23 12:22 GMT
தூசி அருகே ஆட்டோ கவிழ்ந்து 13 பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெம்பாக்கம்:

செய்யாறு அடுத்த மாங்கால் கூட்ரோட்டில் சிப்காட் உள்ளது. இந்த தனியார் ஷூ கம்பெனி இயங்கி வருகிறது.

இந்த கம்பெனியில் வேலை செய்வதற்காக காஞ்சிபுரத்திலிருந்து 13 பெண் தொழிலாளர்கள் ஒரு ஷேர் ஆட்டோவில் தூசி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த பைக்கிற்கு வழி விடுவதற்காக டிரைவர் ஆட்டோவை இடது பக்கம் திருப்பினார்.

கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த 13 பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று 13 பெண்களையும் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய ஆட்டோ டிரைவரை தேடி வருகிறார்.

செய்யாறு பகுதியில் ஷேர் ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் விபத்தை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News