செய்திகள்
மாயம்

ராமநாதபுரத்தில் இலங்கை அகதி தம்பதியர் குழந்தைகளுடன் மாயம்

Published On 2019-08-22 13:38 GMT   |   Update On 2019-08-22 13:38 GMT
இலங்கை தம்பதியர் குழந்தைகளுடன் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

இலங்கையை சேர்ந்தவர் தயாபரராஜ். இவரது மனைவி உதயகலா. இவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முன்பு இருந்தவர். காதல் திருமணம் செய்த இந்த தம்பதியருக்கு, 4 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் தற்போது அகதிகளாக இந்தியா வந்து மண்டபம் முகாமில் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் தயாபர ராஜுக்கு மனநலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் வீடு எடுத்து தங்கி சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் தயாபரராஜ் குடும்பத்துடன் திடீரென மாயமாகி விட்டார். இது குறித்து மண்டபம் முகாம் சிறப்பு துணை தாசில்தார் ரவி, மண்டபம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    
Tags:    

Similar News