செய்திகள்
அரிவாள் வெட்டு

ஆண்டிப்பட்டி அருகே கள்ளத்தொடர்பை தட்டி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

Published On 2019-08-22 13:32 GMT   |   Update On 2019-08-22 13:32 GMT
ஆண்டிப்பட்டி அருகே கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட வாலிபரை அரிவாளாள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி தாலுகா வருஷநாடு பழைய போலீஸ் நிலையம் எதிரில் வசித்து வருபவர் கோரி முகமது (வயது 32). இவரது  மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் சுப்பிரமணி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை கோரி முகமது கண்டித்துள்ளார். இருந்த போதும் கேட்காமல் தொடர்ந்து சுப்பிரமணி அவரது மனைவியுடன் பேசி வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று சுப்பிரமணியும் அவரது நண்பர் பாண்டியராஜும், கோரி முகமதுவிடம் சென்று சமாதானம் பேசியுள்ளனர். அதன் பின் அவரை அழைத்து வந்து தனியாக உள்ள ஒரு தோட்டத்தில் வைத்து மது வாங்கி கொடுத்துள்ளனர். போதையில் இருந்த போது சுப்பிரமணியும், பாண்டியராஜும் அரிவாளால் வெட்டி கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடி விட்டனர். படுகாயமடைந்த கோரி முகமது ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 

இது குறித்து வருஷநாடு போலீசார் வழக்குபதிவு செய்து பாண்டியராஜை கைது செய்தனர். சுப்பிரமணியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News