செய்திகள்
கிணற்றுக்குள் விழுந்த மினி வேன் மீட்கப்படும் காட்சி

துறையூர் விபத்தில் பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

Published On 2019-08-19 04:11 GMT   |   Update On 2019-08-19 06:59 GMT
துறையூர் அருகே மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளர்.
சென்னை:

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நேற்று மினி வேன் டயர் வெடித்ததால் கிணற்றுக்குள் விழுந்தது. இதில், 8 பேர் பலியாகினர். மேலும் 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.



மேலும், உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது தவிர பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்குவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News