என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "துறையூர் விபத்து"
துறையூர்:
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பஜனை மடத்தெருவை சேர்ந்தவர் வையாபுரி. இவரது மகன் விக்னேஷ் (வயது 23). அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் கார்த்திக் (வயது 19). இருவரும் நண்பர்கள்.
கார்த்திக் கோவையில் பணியாற்றி வருகிறார். ஊருக்கு வந்திருந்த அவர் நேற்றிரவு கோவைக்கு புறப்பட்டார்.இதையடுத்து அவரை பஸ் ஏற்றி விடுவதற்காக விக்னேஷ், கார்த்திக்கை மோட்டார்சைக்கிளில் அழைத்து கொண்டு துறையூருக்கு சென்றார்.
உப்பிலியபுரம்-துறையூர் இடையே சிக்கத்தம்பூர் பட்டாங்கோவில் அருகே செல்லும் போது, அந்த வழியாக சிறுகாம்பூர் செங்கொடி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (35), அவரது மனைவி செல்வி (25) மற்றும் உறவினர் கிருப , 1½ வயது குழந்தை சுபஸ்ரீ ஆகியோர் ஒரு மொபட்டில் உப்பிலியபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றவர்கள் பலத்த காயமடைந்தனர்.
உடனே சம்பவ இடத் திற்கு உப்பிலியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். இதில் செல்லும் வழியில் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இந்த விபத்தில் குழந்தை சுபஸ்ரீ லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாள். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்