செய்திகள்
கொலை

திருவாரூர் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை - ஒருவர் கைது

Published On 2019-08-16 10:25 GMT   |   Update On 2019-08-16 10:25 GMT
திருவாரூர் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் வெட்டிக் கொலையில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர்:

திருவாரூர் அருகே அகர திருநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 27). விவசாயி.

இந்த நிலையில் காட்டூரில் நேற்றுமுன்தினம் இரவு காளிகட்டி திருவிழா நடந்தது. இதில் முத்து கிருஷ்ணன் கலந்து கொண்டு விட்டு பிறகு வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது வீட்டு வாசலில் அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது திடீரென 11 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அவர்கள் , முத்துக்கிருஷ்ணனை சூழ்ந்து கொண்டு அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த வெட்டு பட்டதில் முத்துக்கிருஷ்னணனுக்கு தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். காயம் அடைந்த முத்துக்கிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்கிருஷ்ணன் நேற்று மாலை இறந்தார்.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் முத்துக்கிருஷ்ணனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சூர்யதாஸ் என்ற வாலிபருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. முத்துக்கிரு‌ஷணன் மீது தாலுகா போலீசில் அடித்தடி உள்ளிட்ட வழக்குகள் இருந்து வந்தது. இதனால் அந்த வழக்குகளில் இருந்து சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் வீட்டுக்கு வந்த முத்துக்கிருஷ்ணனை, சூர்யதாஸ் மற்றும் அவரது நண்பர்கள் புகழேந்தி, பாபு உள்ளிட்ட 11 பேர் கும்பல் வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக வாலிபர் பாபு போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வரும் சூர்யதாஸ் உள்ளிட்ட 10 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News