செய்திகள்
குண்டடம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் அடுத்த பேட்டை காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் காணியாளன். அரசு போக்குவரத்து கழக டிரைவர். இவரது மனைவி மாரியம்மாள்(35). இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக மாரியம்மாள் மன வேதனை அடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குண்டடம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் அடுத்த பேட்டை காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் காணியாளன். அரசு போக்குவரத்து கழக டிரைவர். இவரது மனைவி மாரியம்மாள்(35). இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக மாரியம்மாள் மன வேதனை அடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குண்டடம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.