செய்திகள்
ஆதரவற்ற பெண் மர்ம மரணம் - போலீசார் விசாரணை
ஒரத்தநாடு அருகே ஆதரவற்ற பெண் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே ஆழியவாய்க்கால் நத்தம் பகுதியில் கடந்த 2 வருடங்களாக சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ஆதரவின்றி சுற்றி திரிந்து வந்தார். அவர் கழுத்தில் தங்க நகை அணிந்திருந்துள்ளார். இடுப்பில் உள்ள சுருக்குப்பையில் பணமும் வைத்திருப்பாராம்.
இந்நிலையில் இன்று அதிகாலை அந்த மூதாட்டி அதே ஊரில் உள்ள நாடக மேடை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பா மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்த மூதாட்டி அணிந்திருந்த தங்கை நகை மற்றும் சுருக்குப்பை காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ஒரத்தநாடு அருகே ஆழியவாய்க்கால் நத்தம் பகுதியில் கடந்த 2 வருடங்களாக சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ஆதரவின்றி சுற்றி திரிந்து வந்தார். அவர் கழுத்தில் தங்க நகை அணிந்திருந்துள்ளார். இடுப்பில் உள்ள சுருக்குப்பையில் பணமும் வைத்திருப்பாராம்.
இந்நிலையில் இன்று அதிகாலை அந்த மூதாட்டி அதே ஊரில் உள்ள நாடக மேடை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பா மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்த மூதாட்டி அணிந்திருந்த தங்கை நகை மற்றும் சுருக்குப்பை காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.