மதுரையில் ராணுவ வீரரிடம் ரூ.4 லட்சம் மோசடி
மதுரை:
மதுரை சுப்பிரமணியபுரம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது51), முன்னாள் ராணுவ வீரர்.
இவருக்கும், புதுஎல்லீஸ் நகர் ஆர்.சி. சர்ச் தெருவைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு தொழில் மேம் பாட்டுக்காக பழனிச்சாமியிடம் கடனாக ரூ.4 லட் சத்தை ஆரோக்கியதாஸ் பெற்றுள்ளார்.
இந்த பணத்திற்கான வட்டியை தராமல் இருந்துள்ளார். இதனை பழனிச்சாமி கேட்டபோது அசலையும் திருப்பி தராததால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, வட்டியுடன் சேர்த்து ரூ.6 லட்சத்து 37 ஆயிரம் பழனிச்சாமிக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.ஆனால் இதுவரை ஆரோக்கிய தாஸ் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.
இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசில் பழனிச்சாமி புகார் செய்தார். ஆரோக்கியதாஸ் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.