செய்திகள்
கைது

இரணியல் அருகே நண்பரை தாக்கிய தொழிலாளி கைது

Published On 2019-08-12 10:35 GMT   |   Update On 2019-08-12 10:35 GMT
இரணியல் அருகே நண்பரை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல்:

இரணியல் வில்லுக்குறி மேலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் அஜீ (வயது 31). கட்டிட தொழிலாளி. இவரது நண்பர் விஷ்ணு (32). இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று அஜீ வீட்டின் அருகே நிற்கும்போது அங்குவந்த அவரது நண்பர் விஷ்ணு அவரிடம் தகராறில் ஈடுபட்டு அஜீயை சரமாரி கற்களைக் கொண்டு தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து இரணியல் போலீசில் அஜீ புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு விஷ்ணுவை கைது செய்தார்.

இதேப்போல் விஷ்ணு இரணியல் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் தன்னை அஜீ ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்தார். அதன்பேரிலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News